உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குரங்குகள் தொல்லை மக்கள் அவதி

குரங்குகள் தொல்லை மக்கள் அவதி

புவனகிரி : புவனகிரி அடுத்த தம்பிக்கு நல்லான்பட்டினம் பகுதியில் குரங்கு தொல்லை அதிகரிப்பால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.புவனகிரி அருகே தம்பிக்கு நல்லாம்பட்டினம் பகுதியில் குரங்கு நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் வீடுகளில் புகுந்து பொருட்களை எடுத்து துவம்சம் செய்வதுடன், மா, தென்னை மற்றும் வாழை மரங்களில் உள்ள பிஞ்சுகளை சேதமாக்கி வருகிறது. மேலும், சாலையில் சுற்றித் திரிவதால், கடலூர்- சிதம்பர சாலையில் விபத்துக்கள் நடந்து வருகிறது. எனவே, இப்பகுதியில் சுற்றி திரியும் குரங்குகளை பிடித்து காப்பு கட்டில் விட, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை