உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி: இருவர் காயம்

மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி: இருவர் காயம்

மந்தாரக்குப்பம்: மின்னல் தாக்கியதில் வாலிபர் இறந்தார். இருவர் படுகாயமடைந்தனர்.பண்ருட்டி அடுத்த காங்கிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்,27; இவர் மேல்பாப்பனம்பட்டு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். இவர் நேற்று மாலை, தனது நண்பர்கள் தினேஷ்,22; டேனியல்,32; ஆகியோருடன் மேல்பாதியில் உள்ள வடிகால் வாய்க்காலில் மீன் பிடிக்க சென்றார். அப்போது திடீரென மழை பெய்தது. மின்னல் தாக்கியதலில் வாய்க்காலில் நின்றிருந்த மூவரும் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தனர்.அவ்வழியே சென்றவர்கள் மூவரையும் மீட்டு மந்தாரக்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்தில் விஜயகுமார் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார். தினேஷ், டேனியல் ஆகியோர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ