உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஞ்., தலைவரின் மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பஞ்., தலைவரின் மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

விருத்தாசலம்: வாலிபரை அடித்து கொலை செய்த ஊராட்சித் தலைவரின் மகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விருத்தாசலம் அடுத்த மாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி மகன் பாக்கியராஜ்,39; அதே கிராமத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர் சுப்ரமணியன் மகன் ராம்கி (எ) கலைவாணன்,32; இருவரும் கடந்த 12ம் தேதி மது அருந்தியபோது, தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கலைவாணன், பாக்கியராஜை கட்டையால் தலையில் தாக்கினார்.அதில் படுகாயமடைந்த பாக்கியராஜ் தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த 14ம் தேதி இறந்தார்.இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து கலைவாணன், அவரது தந்தை சுப்ரமணியன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.கலைவாணனின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையை ஏற்று கலைவாணனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை கடலுார் மத்திய சிறையில் உள்ள கலைவாணனிடம் மங்கலம்பேட்டை போலீசார் நேற்று வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை