உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண்ணாடத்தில் பா.ஜ., இனிப்பு வழங்கல்

பெண்ணாடத்தில் பா.ஜ., இனிப்பு வழங்கல்

பெண்ணாடம்: மூன்றாவது முறை பிரதமராக மோடி பதவியேற்றதை வரவேற்று, பெண்ணாடத்தில் பா.ஜ., சார்பில் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.பழைய பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பொதுக்குழு உறுப்பினர் தமிழ்அழகன் தலைமை தாங்கி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.வழக்கறிஞர் வெங்கடாஜலபதி, முன்னாள் மாவட்ட துணை தலைவர் பாலுப்பிள்ளை, மாவட்ட பட்டியல் அணி பொதுச் செயலர் வேங்கடபதி, நல்லுார் தெற்கு ஒன்றிய பட்டியலணி தலைவர் சங்கர், பொதுச் செயலர் பிரபாகரன், பொருளாளர் சந்திரசேகர், ராஜன், மகளிரணி மகேஸ்வரி, திட்டக்குடி ராஜதுரை, சுடர்மணி, கீரனுார் வேல்முருகன், ஒன்றிய செயலர் சிங்காரம் ஓ.பி.எஸ்., அணி நகர செயலர் செல்வராஜ், துணை செயலர் கிருஷ்ணமூர்த்தி, அய்யப்பன், மாவட்ட பொருளாளர் தொளார் செல்வராஜ், அ.ம.மு.க., நகர செயலர் அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை