உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வில்லியநல்லுாரில் செடல் உற்சவம்

வில்லியநல்லுாரில் செடல் உற்சவம்

புதுச்சத்திரம், : புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூர் மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடந்தது.விழா கடந்த 4 ம் தேதி காலை 6.00 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து 8 ம் தேதி வரையில் இரவு காத்தவராயன் கதை, 9 ம் தேதி மதியம் 1.00 மணிக்கு கழுகு மரம் ஏறுதல், மாலை 6.00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்றுமஞ்சள்நீர் விளையாட்டு விழா, சாகை வார்த்தல் நடந்தது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராமபொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !