உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மன அழுத்தம் ஐ.டி., ஊழியர் தற்கொலை

மன அழுத்தம் ஐ.டி., ஊழியர் தற்கொலை

கடலுார்: மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட, ஐ.டி., ஊழி யர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கடலுார் அடுத்த கிழக்கு ராமாபுரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் வெங்கடகிருஷ்ணன், 24; பொறியியல் பட்டதாரி. இவர், பெங்களூரு ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு மாதமாக மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு, மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார்.நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்றவர், கடலுார் அடுத்த நொச்சிக்காட்டில் உள்ள சவுக்கு தோப்பில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.புகாரின்பேரில், கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை