உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவரை ஆசிரியர் திட்டியதால் விருதை பள்ளியில் பரபரப்பு

மாணவரை ஆசிரியர் திட்டியதால் விருதை பள்ளியில் பரபரப்பு

விருத்தாசலம், : விருத்தாசலத்தில் பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவரின் உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நேற்று காலை 9:30 மணியளவில், பிளஸ் 1 மாணவர் ஒருவரின் பெற்றோர், உறவினர்கள் பள்ளி வளாகத்துக்குள் திரண்டு வந்து, மாணவரை திட்டிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர் பிரேம்குமாரிடம் முறையிட்டனர்.தகவலறிந்த இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சென்று விசாரித்தனர். அதில், நேற்று முன்தினம் பள்ளி மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதால், கலைந்து போகுமாறு ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். அப்போது, அவர் மாணவரை திட்டியதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மாணவர்களின் உறவினர்களை சமாதானப்படுத்தி, இன்ஸ்பெக்டர் அனுப்பி வைத்தார்.இச்சம்பவத்தால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை