உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

கடலுார், : கடலுார் தொழிற்சாலையில் தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார். கடலுார் முதுநகர் அடுத்த கண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 50; இவர், கடலுார், சிப்காட் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் பணிக்கு வந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடன், அருகில் இருந்த தொழிலாளர்கள், அவரை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரவிச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். புகாரின் பேரில், கடலுார், முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை