உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குழந்தைகளுடன் பெண் மாயம்

குழந்தைகளுடன் பெண் மாயம்

குள்ளஞ்சாவடி: குழந்தைகளுடன் பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதுகுள்ளஞ்சாவடி அடுத்த ராமநாதன்குப்பத்தை சேர்ந்தவர் சிவகண்டன், 31. இவரது மனைவி ரேவதி, 26, ஜெயரேஷ்மி, 8, சிவரேஷ்மி, 5, ஆகிய இரு மகள்கள் உள்ளனர். சிவகண்டன் வெளியூருக்கு வேலைக்கு சென்றுவிட்டு, கடந்த 19ம் தேதி வீடு திரும்பினார். அப்போது மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை.இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசில் சிவகண்டன் அளித்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ