உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மலைத்தேனீக்கள் கொட்டியதில் குழந்தை உள்ளிட்ட 10 பேர் பாதிப்பு

 மலைத்தேனீக்கள் கொட்டியதில் குழந்தை உள்ளிட்ட 10 பேர் பாதிப்பு

சேத்தியாத்தோப்பு: மலைத்தேனீக்கள் கொட்டியதில், 2 வயது குழந்தை உள்ளிட்ட 10 பேர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே மாமங்கலம் ஊராட்சியில் நேற்று நுாறுநாள் பணி நடந்தது. காலை 10:00 மணியளவில் மாமங்கலம் அய்யனார் குளம் சுற்றிலும் மரக்கன்றுகள் நடும் பணியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டிருந்தனர். குளத்தை சுற்றியுள்ள புதர்களை அகற்றியபோது மலைத்தேனீக்கள், வேலையில் ஈடுபட்டிருந்த பெண்களை துரத்தி கொட்டியது. பெண்கள் அலறியடித்து ஓடினர். இதில், அ தே பகுதியை சேர்ந்த பட்டு, 70; கலைவாணி, 40; ஜோதி, 56; சரசு, 39; குழந்தை நவனீஸ்வரன், 2 ; உள்ளிட்ட 10 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சோழத்தரம் தனியார் மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரநாராயணன், சோழத்தரம் சப் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மருத்துவமனையில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ