மேலும் செய்திகள்
நெல் மூட்டைகள் தேக்கம்; நாகை விவசாயிகள் வேதனை
09-Feb-2025
விருத்தாசலம் : விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து 2 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில், சிவகங்கை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.மாவட்டத்தில், சம்பா அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், விவசாயிகள் நலன் கருதி 561 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இங்கு தினசரி கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், ஆங்காங்கே உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில் இருந்து 2 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு நேற்று 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டன.
09-Feb-2025