உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 2 சவரன் செயின் திருட்டு

2 சவரன் செயின் திருட்டு

கடலுார் : பர்ஸில் வைத்திருந்த 2 சவரன் செயின் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலுார் அடுத்த காராமணிகுப்பத்தைச் சேர்ந்தவர் செல்வராணி,51. இவர் கடந்த ஜன.,29ம் தேதி, கடலுாருக்கு பஸ்சில் வந்தார். அப்போது கைப்பையில் 2 சவரன் செயினை வைத்திருந்தார். அண்ணாபாலம் சிக்னல் அருகில் பஸ்சிலிருந்து இறங்கிய போது, கைப்பையில் வைத்திருந்த செயினை காணாமல் கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து, செயினை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை