மேலும் செய்திகள்
வீட்டில் கஞ்சா பதுக்கிய 3 பேருக்கு 'குண்டாஸ்'
22-Apr-2025
கடலுார்: கடலுார் முதுநகர் அருகே கஞ்சா வைத்திருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கடலுார் முதுநகர் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் காலை 11:30மணிக்கு மணவெளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபர்களை சோதனை செய்ததில், 1 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில், சேடப்பாளையம் ராதாகிருஷ்ணன் மகன் ஆகாஷ்,23; அன்னவல்லி பாலகிருஷ்ணன் மகன் கவியரசன்,23, சின்ன பிள்ளையார்மேடு சீனிவாசன் மகன் வசந்த் (எ) அய்யப்பன்,24; கரைமேடு பாலமுருகன் மகன் பரத்குமார்,23; என்பது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
22-Apr-2025