உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  4 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு: வடலுாரில் துணிகரம்

 4 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு: வடலுாரில் துணிகரம்

கடலுார்: வடலுாரில் 4 கடைகளில் பூட்டை உடைத்து பொருட்கள், பணம் திருட்டு திருடியது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வடலுார், என்.எல்.சி., ஆபிசர் நகரை சேர்ந்தவர் லிங்குராமன் 49; வடலுாரிலிருந்து, பண்ருட்டி செல்லும் சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை கடைக்கு வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே வைத்திருந்த நல்லெண்ணெய், பவுடர், சோப், வாஷிங் மெஷின் லிக்யூட் உள்ளிட்ட பொருட்களை திருடி சென் றது தெரியவந்தது. அதேபோல அருகில் உள்ள, ஊமத்துரை என்பவரின் பெட், பர்னிச்சர் மார்ட் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு மர்ம நபர்கள் உள்ளே சென்றுள்ளனர். ஆனால் அங்கு பணம் இல்லாததால், திருடு போகவில்லை. மேலும், ஒரு மளிகை கடை, பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த 500 ரூபாய், திருடுபோனது. அதைத்தொடர்ந்து சத்திய ஞான சபை அருகில் உள்ள ஒரு டீக்கடையில் பூட்டை உடைத்து உள்ளே சென்று திருடிக் கொண்டு இருந்த போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் திருடன் முகம் பதிவானது. இதைக் கண்டு மர்ம நபர் ஒருவர், முகத்தை மூடிக் கொண்டு அங்கிருந்து, 1500 ரூபாய் திருடிய காட்சி பதிவாகி உள்ளது. மேலும் இது குறித்த சி.சி.டி.வி., காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை