உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துாய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

துாய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கடலுார் : கடலுார் முதுநகரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, துாய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு கடலுார் மாநகராட்சி கவுன்சிலர் சரத் தினகரன் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., சிறப்பு விருநதினராக பங்கேற்று, துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிர்வாகிகள் தினகரன், ஆதிபெருமாள், சுதாகர், மாநகராட்சி கவுன்சிலர்கள் கர்ணன், கீர்த்தனாஆறுமுகம், மகேஸ்வரி விஜயகுமார், பாரூக் அலி, சுமதி ரங்கநாதன், ஊராட்சிதலைவர் மனோகரன், இளைஞரணி பொறுப்பாளர் பிரகாஷ், சதீஷ், திருமலை, சந்தோஷ், மனோஜ், சூர்யா, கண்ணன், பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !