ஏ.டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
கடலுார் : கடலுார் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்புப்பிரிவு ஏ.டி.எஸ்.பி., பொறுப்பேற்றார்.சென்னையில் தீவிரவாத தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.,யாக பணியாற்றியவர் நல்லநல்லதுரை. இவர் பதவி உயர்வு பெற்று கடலுார் மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்புப்பிரிவு ஏ.டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். அவர் கடலுார் அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்று கொண்டார்.