ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், இயந்திர பொறியியல் துறையில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பேராசிரியர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். இளையோர் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் பங்கேற்று ரத்த தானத்தின் தேவை, முக்கியத்துவம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார். தமிழ்நாடு அரசின் சிறந்த சமூக சேவை விருது பெற்ற ராமசந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ரத்த தானம், உடல் உறுப்பு தான நடைமுறைகள் குறித்து பேசினார். ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவை சங்க தனி அதிகாரிகள் கண்ணன், ராமச்சந்திரன் செய்திருந்தனர். தனி அதிகாரி செந்தில்நாதன் நன்றி கூறினார்.