விழிப்புணர்வு பேரணி
பண்ருட்டி:பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார். முதன்மை முதல்வர் வாலன்டினா லெஸ்லி முன்னிலை வகித்தார். ஜான்டூயி கல்விக் குழுமத்தின் இணை செயலர் நித்தின் ஜோஷ்வா, போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் மணிகண்டன், தலைமை ஆசிரியர் கனகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.