உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புவனகிரியில் மூன்று இடங்களில் பைக் திருட்டு

புவனகிரியில் மூன்று இடங்களில் பைக் திருட்டு

புவனகிரி: புவனகிரியில் திருட்டுப் போன 3 பைக்குகள் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.புவனகிரி தாமரைக்குளம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் ரமேஷ், இவர் கடந்த ஜூன் 18ம் தேதி இரவு இவரது எதிர் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த பைக்கை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.அதே மாதம் 27ம் தேதி குறிஞ்சிப்பாடி சந்தவெளிப்பேட்டை மேற்கு தெரு ராஜேந்திரன் புவனகிரி அங்காளம்மன் கோவில் வாசலில் பைக்கை நிறுத்தி விட்டு கோவிலுக்கு சென்று, திரும்பி வந்து பார்த்தபோது பைக் காணவில்லை.மேலும் புவனகிரி பூதவராயன்பேட்டை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் . இவர் கடந்த 16 ம் தேதி காலை புவனகிரி பங்களா அருகில் நிறுத்தி விட்டு கடைக்கு சென்று திரும்பிவந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை.இதுகுறித்து தனித்தனி புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். புவனகிரி பகுதியில் மீண்டும் திருட்டு சம்பம் துவங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை