புத்தேரி வரதராஜ பெருமாள் சந்தனகாப்பில் அருள்பாலிப்பு
திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி நான்காம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.இதையொட்டி, நேற்று காலை உலக மக்கள் நலன் பெற வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபி ேஷகம், மகா தீபாராதனை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு பிரகாரத்தில் உற்சவர் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வவிநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.