உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொடர் மழை காரணமாக பிச்சாவரத்தில் படகு சவாரி நிறுத்தம்

தொடர் மழை காரணமாக பிச்சாவரத்தில் படகு சவாரி நிறுத்தம்

கிள்ளை : மழை காரணமாக பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில் இயற்கை சூழலுடன் மருத்துவ குணம் கொண்ட சுரபுண்ணை என்னும் மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்துள்ளதால், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து, படகு சவாரி செய்து இயற்கை அழகை கண்டுகளித்து செல்கின்றனர்.இந்நிலையில் நேற்று பிச்சாவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால், படகு சவாரி நிறுத்தப்பட்டது.இருந்தும், மழையை பொருட்படுத்தாமல் வந்த வெளியூர் சுற்றுலா பயணிகள் படகு சவாரி இயக்கப்படவில்லை என தெரிந்துக்கொண்டு திரும்பி சென்றனர். பாதுகாப்பு கருதி மோட்டார் படகுகள் மற்றும் துடுப்பு படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை