உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நிலத் தகராறில் தம்பியை வெட்டிய அண்ணன் கைது

நிலத் தகராறில் தம்பியை வெட்டிய அண்ணன் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே நிலத் தகராறில் தம்பி தலையில் கத்தியால் வெட்டிய அண்ணனை போலீசார் கைது செய்தனர். கம்மாபுரம் அடுத்த கத்தாழை கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்தியநாதசுவாமி மகன் ஜெயராஜ், 30; அதேபகுதியைச் சேர்ந்தவர் இவரது பெரியப்பா மகன் ராஜலிங்கம் மகன் சரவணன், 41; இருவக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சரவணன், ஜெயராஜை கத்தியால் வெட்டினார். படுகாயமடைந்த ஜெயராஜ் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, சரவணனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி