உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெல்லிக்குப்பத்தில் விபத்து பகுதி நடவடிக்கைக்கு கலெக்டர் உத்தரவு

நெல்லிக்குப்பத்தில் விபத்து பகுதி நடவடிக்கைக்கு கலெக்டர் உத்தரவு

நெல்லிக்குப்பம்,: நெல்லிக்குப்பம் அருகே வளைவான சாலை பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதை தடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.கடலுார்- பண்ருட்டி சாலையில், நெல்லிக்குப்பம் வாழப்பட்டு அருகே சாலை மிகவும் வளைவாக செல்கிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. அந்த சாலையின் அருகே தனியார் பள்ளி உள்ளதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, சாலையை நேராக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. அதையடுத்து, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் சென்று சாலையை நேரடியாக ஆய்வு செய்தார்.அப்போது, உடனடியாக வளைவாக செல்லும் சாலையை நேராக மாற்றி அமைக்க நடவடிக்க எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அவருடன் கூடுதல் கலெக்டர் சபானா அஞ்சும், நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் சத்தியமூர்த்தி, தாசில்தார் ஆனந்த், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி