மேலும் செய்திகள்
அன்புமணி பிறந்த நாள்: கடலுாரில் கொண்டாட்டம்
10-Oct-2024
கடலுார் : தமிழக காங்., முன்னாள் தலைவர் அழகிரி பிறந்த நாளையொட்டி, கடலுார் மாநகர காங்., சார்பில் பொதுமக்களுக்கு சர்க்கரை பாக்கெட் வழங்கும் விழா நடந்தது.கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் விழாவிற்கு, மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ரங்கமணி, மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாவட்ட பொதுச்செயலாளர் கிஷோர்குமார், மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர். காங்., மாநகராட்சி கவுன்சிலர் சரஸ்வதி வேலுச்சாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சர்க்கரை பாக்கெட்டுகளை வழங்கினார்.அப்போது, மாநகர செயலாளர் ராமஜெயம், பாலகுரு, விஜயமணி, மாவட்ட செயலாளர் சாந்தி, நெல்லிக்குப்பம் கவுஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
10-Oct-2024