| ADDED : செப் 21, 2011 11:11 PM
கடலூர்:கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், இளம்
செஞ்சிலுவை சங்கம் சார்பில் உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு
ஊர்வலம் நடந்தது.கல்லூரியில் துவங்கிய ஊர்வலத்தை சப் கலெக்டர் கிரண் குராலா
கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ரட்சகர் தலைமைத்
தாங்கினார்.நிகழ்ச்சியில் திருவள்ளுவர் பல்கலைக் கழக விளையாட்டுத்துறைத் தலைவர்
அமல்தாஸ், பேராசிரியர் ஜெயந்தி ரவிச்சந்திரன், டாக்டர் ராஜசேகர்,
செஞ்சிலுவை சங்க பாலசுப்ரமணியன், ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டி பெர்னிணன்ட்,
வரலாற்றுத் துறைத் தலைவர் சின்னப்பன் உட்பட பலர் பங்கேற்றனர். 200க்கும்
மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஊர்வலம் உழவர் சந்தை வரை சென்று
திரும்பியது.ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் சந்தனராஜ்
செய்திருந்தார்.