உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கருவேப்பிலங்குறிச்சி பள்ளியில் கருத்தாய்வு மையக் கூட்டம்

கருவேப்பிலங்குறிச்சி பள்ளியில் கருத்தாய்வு மையக் கூட்டம்

விருத்தாசலம் : கருவேப்பிலங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு குறு வட்ட கருத்தாய்வு மையக் கூட்டம் நடந்தது. மைய ஒருங்கிணைப்பாளர் தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். இதில் குறுந்தகடு மூலம் ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர் பயிற்றுனர்கள் ஜெயலட்சுமி, ஜாய்ஸ் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். ராஜேந்திரபட்டினம், சத்தியவாடி, பேரளையூர் உள்ளிட்ட 15 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர். உதவி ஒருங்கிணைப்பாளர் புவியரசு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ