உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., கவுன்சிலர்கள் போராட்டம் வாபஸ்

தி.மு.க., கவுன்சிலர்கள் போராட்டம் வாபஸ்

கடலுார்:கடலுாரில் தி.மு.க., கவுன்சிலர்கள் முடிவு செய்திருந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர். கடலுார் மாநகராட்சி கமிஷனர் காந்திராஜிடம், தி.மு.க., கவுன்சிலர்கள் கீதா, பிரகாஷ், தமிழரசன், சரத் தினகரன், சுமதி, மகேஸ்வரி, ராதிகா, கர்ணன், பாரூக் அலி, கீர்த்தனா ஆகியோர் கொடுத்துள்ள மனு;மாநகராட்சி தேர்தலில் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக, எங்களது வார்டுகளுக்கு எவ்வித அடிப்படை வசதியும் செய்து தர மறுப்பதோடு, எங்களை அவமானப்படுத்துகின்றனர்.எங்கள் நிலையை தி.மு.க., தலைமைக்கு தெரியப்படுத்தும் விதமாக இன்று காலை 8:00 மணிக்கு மாநகராட்சி அலுவலக காந்தி சிலை முன், அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். அதற்கு, அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தை வாபஸ் பெற்றதாக, மனு கொடுத்த கவுன்சிலர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை