உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணல் கடத்தல் முதியவர் கைது

மணல் கடத்தல் முதியவர் கைது

கடலுார்: மாட்டு வண்டியில் மணல் கடத்திய வழக்கில் முதியவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் அடுத்த திருவந்திபுரம் கெடிலம் ஆற்றில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, டி.புதுாரை சேர்ந்த துரைராஜ், 61; அவரது மனைவி வள்ளி, மகன் பாஷா ஆகியோரும், எம்.புதுாரை சேர்ந்த காளிமுத்து, அவரது மனைவி தையல்நாயகி, மகன் குரு ஆகியோரும் தனித்தனியாக மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் கடத்தியது தெரிந்தது.திருப்பாதிரிப்புலியூர் போலீசார், துரைராஜ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிந்தனர். இதில், துரைராஜ் கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை