விபத்தில் முதியவர் பலி
புதுச்சத்திரம்: மொபட் மீது கார் மோதிய விபத்தில், சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார்.குறிஞ்சிப்பாடி அடுத்த பொன்னாங் குப்பத்தை சேர்ந்தவர் ஆதிமூலம், 65; இவர் கடந்த 8 ம் தேதி பதிவெண் இல்லாத மொபட்டில், ஆலப்பாக்கம் சுடுகாடு அருகே வந்தபோது, பின்னால் வந்த கார், எதிர்பாராமல் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த முதியவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.இது குறித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.