| ADDED : ஜன 14, 2024 04:36 AM
கடலுார்; கடலுார் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு, தோட்டப்பட்டு அனைத்து நகர் குடியிருப்போர் நலச்சங்கம், தோட்டப்பட்டு ஊராட்சி ஆகியன சார்பில் மக்கள் ஒற்றுமை சமத்துவ பொங்கல் விழா நடந்தது.தோட்டப்பட்டில் நடந்த விழாவில், கூட்டமைப்பு தலைவர் பச்சையப்பன், சங்கத் தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினர்.சிறப்புத் தலைவர் மருதவாணன், இணைப் பொதுச் செயலாளர் தேவநாதன், பொருளாளர் வெங்கட்ரமணி முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் வெங்கடேசன், செயலாளர் பாஸ்கர் வரவேற்றனர்.சிறப்பு விருந்தினர்கள் கலெக்டர் அருண் தம்பு ராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் விழாவை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். விழாவில், அரசு ஒப்பந் ததாரர் ராஜசேகர், ஊராட்சித் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.