உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

விருத்தாசலம்: வீட்டைவிட்டு வெளியே சென்ற மகனை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். விருத்தாசலம் வி.என்.ஆர்., நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் நிர்மல்ராஜ், 27; இவர் கடந்த மாதம் 10ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து நிர்மல்ராஜை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை