பெண் போலீஸ் கணவர் துாக்கிட்டு தற்கொலை
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பெண் போலீசாரின் கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.கருவேப்பிலங்குறிச்சி ஜே.ஜே., நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர், 26; இவரது மனைவி ஜெயப்பிரியா, 26; கடலுார் ஆயுதடையில் பணிபுரிந்து வருகிறார். திருமணமாகி 4 ஆண்டு கள் ஆகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜசேகர், பெட்ரூமில் உள்ள மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஜெயப்பிரியா கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.