உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தீ விபத்தில் பாதிப்பு எம்.எல்.ஏ., நிவாரணம்

தீ விபத்தில் பாதிப்பு எம்.எல்.ஏ., நிவாரணம்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகள் வழங்கினார். பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி ஊராட்சியைச் சேர்ந்தவர் சையத் உமர். இவரது, கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது. இவரது குடும்பத்திற்கு பாண்டியன் எம்.எல்.ஏ., ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஜெயசீலன், மகேஷ், நிர்வாகிகள் அப்துல் ஹக், முகமது அலி, பாலமுருகன், மகேந்திரன், மூர்த்தி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ