அரிஸ்டோ பள்ளியில் தீத்தடுப்பு செயல்முறை
கடலுார்: கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் தீத்தடுப்பு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளி முதல்வர் மதுர பிரசாத் பாண்டே முன்னிலை வகித்தார். கடலுார் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆறுமுகம், 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசினார். தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.