உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா வியாபாரி குண்டாசில் கைது

கஞ்சா வியாபாரி குண்டாசில் கைது

கடலுார், : பிரபல கஞ்சா வியாபாரி குண்டாசில் சிறையில் அடைக்கப்பட்டார்.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் இந்திரா நகரை சேர்ந்தவர் முனுசாமி, 28; இவர் மீது திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. 2 கஞ்சா வழக்குகள் உள்ளது. இவரது தொடர் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, குண்டாசில் சிறையில் அடைக்க கலெக்டருக்கு, எஸ்.பி., ராஜாராம் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின்பேரில், முனுசாமி குண்டாசில் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ