உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் குட்கா பொருட்கள் விற்ற பெட்டிக்கடைகாரரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று வயலுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆனந்தராஜ், 35, என்பவர் தனது பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, ஆனந்தராஜை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !