வீரஆஞ்சநேயர் கோவிலில் 19ம் தேதி அனுமன் ஜெயந்தி
கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் அண்ணா பாலம் அருகில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயகர் கோவிலில் வரும் 19ம் தேதி, அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது. விழாவையொட்டி காலை 9 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு சுவாமி திருவீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் ஞானசுந்தரம், தக்கார் சரவணரூபன் மற்றும் உபயதாரர் ஜி.ஆர்.கே., எஸ்டேட்ஸ் நிர்வாக இயக்குனர் துரைராஜ் செய்து வருகின்றனர். பூஜைகளை கோவில் பட்டாச்சாரியார் தேவநாதன் செய்து வைக்கிறார்.