மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த ஆராய்ச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் சேட்டு மகன் ராம்குமார்,37; இவரது மனைவி லாவண்யா. ராம்குமார் குடிப்பழக்கம் உள்ளதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இதுதொடர்பாக 15 நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் லாவண்யா கோபித்துக் கொண்டு பத்திரக்கோட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.நேற்று முன்தினம் ராம்குமார், மனைவியை அழைத்து வருவதற்காக பத்திரக்கோட்டைக்கு சென்றார். அங்கு அவர் இல்லாததால், மனமுடைந்த ராம்குமார், தான் எடுத்துச் சென்ற பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன் அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.