| ADDED : செப் 15, 2026 10:24 PM
பண்ருட்டி;நகர அ.தி.மு.க.,சார்பில் நடந்த விழாவில் மாவட்ட செயலாளர் தாமோதரன், மோகன் எம்.எல்.ஏ., அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவை தலைவர் ராஜதுரை , முன்னாள் எம்.எல்.சி.,சிவராமன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பண்ருட்டி நகர தி.மு.க., வினர் தட்டாஞ்சாவடியில் இருந்து ஊர்வலமாக வந்து நான்கு முனை சந்தில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், மாவட்ட அவை தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன், துணை செயலாளர் ஆனந்தி், தணிகைசெல்வம உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.