உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாட்டரி விற்றவர் கைது  

லாட்டரி விற்றவர் கைது  

விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலத்தில் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, சின்னபண்டாரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த திருமால், 47; என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தனிப்பிரிவு போலீசார் அவரை பிடித்து விருத்தாசலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடன், போலீசார் வழக்குப் பதிந்து திருமாலை கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !