மேலும் செய்திகள்
விபத்தில் 3 பேர் இறந்த வழக்கு: வேன் டிரைவர் கைது
03-Nov-2025
கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர், அப்பாவு தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்,56; குடிநீர் டிராக்டரில் தண்ணீர் திறந்து விடும் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை 5:45 மணிக்கு வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக, டிராக்டரில் வேலைக்கு சென்றார். டிராக்டரை கடலுார், நவநீத நகரைச்சேர்ந்த டிரைவர் சரவணன்,40; என்பவர் ஓட்டினார். கம்மியம்பேட்டை தனி யார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது, டிராக்டரில் இருந்து வேல்முருகன் தவறிவிழுந்தார் . பின் சக்கரம் அவரது உடலில் ஏறி இறங்கியதில் வேல்முருகன் அதே இடத்தில் இறந்தார். புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
03-Nov-2025