நிகும்பலா யாகம்
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு நரியன்ஓடை கரையில் பாதாளகாளி மற்றும் பிரத்தியங்கரா தேவி கோவில்கள் உள்ளது. இங்கு, அமாவாசையொட்டி, பிரத்தியங்கராதேவிக்கு நிகும்பலா யாகம் நடந்தது.பிரத்தியங்கரா தேவி மண்டபத்தில் நேற்று மதியம் 1:00 மணிக்கு யாகவேள்விகள் ஆரம்பிக்கப்பட்டது. 1:45 மணிக்கு யாக வேள்வியில் மிளகாய்வற்றல் கொட்டப்பட்டு நிகும்பலா யாகம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடந்தது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. 2:30 மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.பூஜை ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி அறிவழகன் குருக்கள் செய்திருந்தார்.