உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில்வே ஸ்டேஷனில் பார்க்கிங் வசதி தேவை

ரயில்வே ஸ்டேஷனில் பார்க்கிங் வசதி தேவை

மந்தாரக்குப்பம்: நெய்வேலி ரயில்வே ஸ்டேஷனில் பார்க்கிங் வசதி இல்லாததால் பயணிகள் அவதியடைகின்றனர். கடலுார்-திருச்சி, கடலுார்-சேலம் ரயில் மார்க்கத்தில் நெய்வேலி ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. இவ்வழியாக தினசரி கடலுார்-திருச்சி, காரைக்கால்-பெங்களூரு, கடலுார்-சேலம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் வந்த செல்கின்றனர். ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைகின்றனர். எனவே, வாகனங்கள் நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி