உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கடலுார்: கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன் துவக்க உரையாற்றினார். வட்ட செயலாளர் சிவப்பிரகாசம் விளக்க உ ரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், சிவராமன், குழந்தைவேலு, ராமதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; 3 சதவீதம் அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ