உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தெய்வீக பக்தர் பேரவை அன்னதானம் வழங்கல்

தெய்வீக பக்தர் பேரவை அன்னதானம் வழங்கல்

சிதம்பரம்: சிதம்பரம் ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி, தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் அன்னதனம் வழங்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனிதிருமஞ்சன தரிசன விழாவில், தெய்வீக பக்தர்கள் பேரவையினர் அன்னதானம் வழங்கினர். கீழசன்னதியில் நடந்த நிகழ்வில், பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி ராதா தலைமையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது மாநில துணைத் தலைவர் செல்வகுமார், மாநில பொது செயலாளர்கள் ரகோத்தமன், பால்மணி, செந்தில் ராஜா, ரவி, வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை