உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  உறுதிமொழி ஏற்பு

 உறுதிமொழி ஏற்பு

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மனித உரிமைகளை மதித்து நடப்பதும் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் டிச., 10ம் தேதி உலக மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு உலக மனித உரிமைகள்தின விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. டி.ஆர்.ஓ., புண்ணியகோட்டி தலைமையில், அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) தீபா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி