உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இரு பெண்கள் மாயம் போலீசார் விசாரணை

இரு பெண்கள் மாயம் போலீசார் விசாரணை

குறிஞ்சிப்பாடி : பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையைச் சேர்ந்தவர் சிவசுப்ரமணியன், 43; வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி சுவர்ணலதா, 43; கடந்த 6ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சுவர்ணலதா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். மற்றொரு சம்பவம் பண்ருட்டி அடுத்த பாலுாரை சேர்ந்தவர் சிவக்குமார் மகள் சுவேதா, 21; கடலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் 3ம் ஆண்டு மாணவி. கடந்த 24ம் தேதி வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சுவேதா தாய் விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை