உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பள்ளியில் சைக்கிள் வழங்கல்

அரசு பள்ளியில் சைக்கிள் வழங்கல்

பரங்கிப்பேட்டை -பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் முகமது யூனுஸ், கவுன்சிலர்கள் தையல்நாயகி கணேசமூர்த்தி, ஆனந்தன், செழியன் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் அன்வர் பாஷா வரவேற்றார்.144 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிளை, சேர்மன் தேன்மொழி சங்கர் வழங்கினார்.விழாவில், மாவட்ட பிரதிநிதி சங்கர், கவுன்சிலர்கள் ஜாபர் ஷரீப், ரொகையாமா குன்முக மது, ஜாஸ்மின் நிஹார் அஜீஸ், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் உதயகுமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை