உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  போலீஸ் பயன்படுத்தியவாகனங்கள் 23ம் தேதி பொது ஏலம் 

 போலீஸ் பயன்படுத்தியவாகனங்கள் 23ம் தேதி பொது ஏலம் 

கடலுார்: கடலுார் மாவட்ட போலீசில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 23ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது. இது குறித்து எஸ்.பி., ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடலுார் மாவட்ட போலீசில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் 16, இரண்டு சக்கர வாகனங்கள் 34 என மொத்தம் 50 வாகனங்கள் வரும் 23ம் தேதி காலை 10:00 மணிக்கு கடலுார் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுக்க விரும்புவோர் வரும் 22ம் தேதி மாலை 5:00 மணி வரை கடலுார் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிடலாம். ஏலம் எடுக்க விரும்புவோர் 22ம் தேதி அன்றே இரு சக்கர வாகனங்களுக்கு 5,000 ரூபாய், நான்கு சக்கர வாகனங்களுக்கு 10,000 ரூபாய் முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப் படுவர். ஏலம் எடுத்தவுடன் முழுத் தொகை மற்றும் அதற்குண்டான ஜி.எஸ்.டி., வரியாக இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீதம், நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதம் தொகையை ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ