உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்டத்தில் 2வது  நாளாக மழை புவனகிரியில் 6 செ.மீ.,பதிவு

மாவட்டத்தில் 2வது  நாளாக மழை புவனகிரியில் 6 செ.மீ.,பதிவு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் கோடை மழை இரண்டாவது நாளாக பெய்தது. அதிகளவாக புவனகிரியில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. கடலுார் மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளும் கோடை மழை பெய்தது. மாவட்டத்தில் மி.மீட்டரில் மழை அளவு விவரம்:புவனகிரியில் 62, குறிஞ்சிப்பாடி 60, பரங்கிப்பேட்டை 47.2, குப்பநத்தம் 46.8, லால்பேட்டை 46, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் 43, ஸ்ரீமுஷ்ணம் 39.3, வேப்பூர் 35, பெலாந்துரை 34.8, விருத்தாசலம், மேமாத்துார் 32, கொத்தவாச்சேரி 27, தொழுதுார் 25, லக்கூர் 24.2, அண்ணாமலை நகர் 24, காட்டுமயிலுார் 20, சேத்தியாத்தோப்பு 19, எஸ்.ஆர்.சி குடிதாங்கி 14.5, வானமாதேவி 14, கீழ்செருவாய் 11, பண்ருட்டி, கடலுார் 10, வடக்குத்து 6 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தல் நேற்று இரண்டாவது நாளாக மழை பெய்ததால் கடும் வெய்யிலில் தவித்த மக்கள், தற்போது மழையால் குளிந்த காற்று வீசுவதால் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை